பிரிந்த பிறகும்
அவள் பிரியவில்லை
அவன்
மனசிலிருந்து இன்னும்.
+
எழுவதற்கு
நிறைய இருக்கிறது
அவளிடம்
கவிதையைத் தவிர.
ந க துறைவன்.
பிரிந்த பிறகும்
அவள் பிரியவில்லை
அவன்
மனசிலிருந்து இன்னும்.
+
எழுவதற்கு
நிறைய இருக்கிறது
அவளிடம்
கவிதையைத் தவிர.
ந க துறைவன்.
காதல் என்பது எப்போதுமே அறியாதவர்களிடம், பரிச்சயம் இல்லாதவர்களிடம் தான் நடக்கிறது.
ஓஷோ.
1.
மௌனமாய் இயங்குகிறது
பிரபஞ்சம்
வெளிதான்
ஆர்ப்பரிக்கிறது
இரைச்சலாய் எந்நேரமும்…
2.
நான்
மனமற்று கம்பீரமாய்
மௌனம்
அனுஷ்டிக்கின்றன
அழகான பூக்கள்.
3.
இளநீர்க்குள்
நிரம்பி இருக்கிறது
தென்னையின்
ஆழ்ந்த மௌனம்.
4.
மொழி அற்ற
மொழியே
மௌனம்.
ந க துறைவன்.
நிழல் அற்ற வெட்ட வெளி
பிரதிபலிக்கின்றன
வெப்பக் கதிர்கள்
பறந்து செல்கிறது சட்டென
பாறை மேல் அமர்ந்த பறவை.
ந க துறைவன்.
சில்லென்று குடிப்பதற்கு
குளிர்பானக் கடையில் கூட்டம்
வாங்கி பருகினாலும்
உள்தாகம் தணியாமல்
முகமெல்லாம்
வியர்வைத் துளிகள்
ந க துறைவன்.
பாதையோரம் கிழவி
தலையில் முக்காடு
கூடை நிறைய நுங்கு.
ந க துறைவன்.
எங்கும்
வெக்கையாக இருக்கிறது
மரங்களே
கொஞ்சம் வேகமாக
விசிறி விடுங்கள்.
2.
சமாளிப்புக்காக
சொல்லும் பொய்யே
அவர் யார்? என்பதை
உணர்த்தி விடுகிறது.
3.
டீ
கோப்பைகள்
இடையே
இருவருக்குமான
உரையாடல் இனிப்பாய்.
4
நிறைய தகவல்கள்
கிடைக்கின்றன
ஜோக்ஸ்
எழுதுபவர்களுக்கு.
ந க துறைவன்.