நீலமலர்…!!

*

தாவணிப் பறந்தாட

துள்ளித் துள்ளிப் போறா…

தட்டாம்பூச்சிங்க அவ கூட

சிறகடித்துப் பறக்குது.

*

இலந்தம் பூவைப் போலவே

இளமை ரொம்ப அழகு

மயில்வண்ணத் தோகைப்போல

கட்டிய தாவணி யழகு.

*

ஆலமரம் விழுதுகள் போல

கருங்கூந்தல் நீளம்

ஆளானப் பொண்ணு

அவ பேருங் கூட நீலம்.

*

தண்ணிக் குடம் தூக்கிப் போனா

தளும்பவில்லை மனசு

கண்பார்வை வீசிப் போனா

காதல் விழிச்சுடரோ புதுசு.

*

செல்போனில் பேசிப் போனா

உதடு சிவந்து தெரியுது

பேசும் வார்த்தை என்னவென்று

காத்துக்கு மட்டும் தெரியுது.

*

காத்து வந்துச் சொன்னா

கட்டிக்க எனக்கு சம்மதம்

நீலமலர் அழகில் சொக்கி

நீண்ட காலம் வாழ்ந்திடுவேன்…!!

*

Published by

poetthuraivan

BSNL Retired Staff Plot No. 20 vasantham Nagar Extension Phase III, Sathuvahari, Vellore - 632 009. Tamil nadu. India. cell no. 890 390 5822

“நீலமலர்…!!” இல் 2 கருத்துகள் உள்ளன

பின்னூட்டமொன்றை இடுக