நடைமுறை…!!

நீங்கள் மக்களை சரியான முறையில் நடத்துகிறீர்கள் என்றால், அவர்களும் உங்களை சரியான முறையில் நடத்துவார்கள்.
– பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

செய்திகள் என்ன சொல்கின்றன?

செய்திகள் என்ன சொல்கின்றன?
*
1. “ கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிகம் தரக்கூடாது. நோய்வாயப்பட்டு இறக்கும் கோழிகளை உண்ணக்
கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் ஏற்படும். ”
பெண் குழந்தைகளைக் காக்க பிராய்லர் கோழி கறியை தவிர்ப்பது நல்லது.
2. புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுப்பு.
அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது. அதற்கான சட்டத் திருத்தம் அரசு கொண்டு வரவேண்டும்.
3. யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். நடிகர் கமல்ஹாசன் கருத்து.
அயோத்தியை பாதரச்சை நாட்டை ஆண்ட வரலாறு தானே நம்முடையது.
4. 3 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது? கருத்து தெரிவிக்க மோடி அழைப்பு.
மாடுகளுக்கு அதிருஷ்டம். மனிதர்களுக்கு துரதிருஷ்டம். உங்கள் மொபைல் செயலியில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.
5. 17 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து.
விருந்தும் மருந்தும் கூட்டணி உறவு வரை.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.

அக்னி நட்சத்திரம்…!!

மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.
*

இருப்பை உணர்த்தி…!!

*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில் பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*

கண்கள்…!!

Haiku – Tamil / English.
*
நுங்கு மூன்று கண்கள்
தேங்காய் மூன்று கண்கள்
சிவன் நெற்றியில் ஞானக் கண்.
*
Three eyes of nicotine
Coconut three eyes
Shiva’s eye on the forehead
N.G.Thuraivan.

சேவல்…!!

தெருவில்
ஒரு வீட்டில்
காணாமல் போனது
சேவல்
பக்கத்துத் தெருவில்
ஒரு வீட்டில் சமைக்கும்
கோழிக்கறி வாசனை.
ந.க.துறைவன்.