வள்ளி

வள்ளி

அசுரர்கள் வென்ற மனஉளைச்சல்
முருகன் கோபம் தணித்தது
வள்ளியின் இக்சாசக்தி காதல்.

ந க துறைவன்.

மேகம்

மழைமேகங்கள் நகர்கின்றன
நகரத்தின் தலைக்கு மேலே
தாழப் பறக்கும் வண்ணத்திகள்.

ந க துறைவன்.

பல்லாங்குழி

பல்லாங்குழி

1.
மதர்த்த பெருமுலை கவர்ச்சி
பார்வை கவரும் சக்தி
கல்தூண் சிலையழகு.
2.
பாறை மீது தியானம்
காற்றின் திசையில்
அலைகிறது துறவியின் தாடி.
3.
அந்த பசுமை புல்வெளி
எனக்கு சொந்தம் அல்ல
இயற்கையின் சொத்து.
4.
மழைக்கு ஒதுங்கியது
இலையின் பின்புறம்
நனையாமல் சிறுபுழுக்கள்.
5.
பூங்காவில் நுழைவதற்கு
பறவைகளுக்கு
அனுமதி இலவசம்.
6.
இலையின் பின்புறம்
வெண்புள்ளியாய் இருப்பது
எந்த புழுவின் சினைமுட்டை?
7.
இரை உண்டு பசியாறின
முட்டைகள் இடுவதற்கேற்ற
நீர்நிலைத் தேடின வாத்துகள்.
8.
இனிப்பாய் சுவைத்து ரசிப்பு
அந்த குளிர்ப்பானக் கடையில்
ஒலிக்கிறது கானா பாடல்.
9.
கோயிலில் குடியிருப்பது
அசலா? போலியா?
மக்கள் வணங்கும் மூலவர்கள்.
10.
தோல்விக்கு வருத்தப்பட்டாள்
நாணித் தலை கவிழ்ந்து
பல்லாங்குழி விளையாட்டு.
11.
தறியில் அறுந்த நூல்
இணைத்து வேலை தொடர்ந்தான்
குடும்பத்தில் சிக்கல்.
12..
சாமி படத்திலிருந்து விழுந்தது பூ
நல்ல சகுணமென வணங்கினாள்
சுவரோரமாய் நகர்ந்தது பல்லி.
13.
பசியில் அலைந்த நாய்களுக்கு
தெருமூலையில் கிடைத்தது திருப்தியாய்
எச்சில் வாழையிலை சோறு.
14.
பாலாற்றைக் கடந்து போகிறது ரயில்
சென்னை நோக்கி பயணம்
ஜோலார்ப்பேட்டை தண்ணீர்.
15.
வலிகள் சொல்லாமல் மௌனம்
மலர்கள் தாங்கி சுமக்கும்
மழைத்துளியின் அதிர்வுகள்.
16.
எருக்கம் செடி நிறைய பூக்கள்
யாரும் பறிக்காமல் உதிர்ந்தன
அருகில் பிள்ளையார் கோயில்.
17.
தனியாருக்கு தாரை வார்ப்பு
எதிர்த்து வயல்வெளியில்
மரவட்டை ( ரயில் பூச்சி ) கள் மறியல்.
18.
யாரும் நிர்பந்திக்க இயலாது
இதுதான் உண்ண வேண்டுமென
பூச்சிகளே பல்லிகள் உணவு.

ந க துறைவன்.

நாகப் பழம்

நாகப் பழம்

1.
நான் எப்பொழுதும்
நானே
நான் என்பதற்குள்
இருப்பாக இருக்கிறேன்
நான்.
2.
எத்தனை வன்குணம்?
உடைத்து நொறுக்கியவர் யார்?
சிதைந்த புத்தர் சிலை.
3.
சிலையின் பெயர் சிவன்
வடித்த சிற்பி யார்?
பொறிக்கப்படவில்லை பெயர்.
4.
ஒரு நதி
என்னை அழைக்கிறது
புனித நீராடுவதற்கு.
5.
குருவைத் தேடுவது போன்றது
நல்ல புத்தகம் தேடுவது.
6.
ஆதியில் கல்வி அறிவற்ற
ஆதிவாசிகள் ஆழ்ந்து படித்த
புத்தகம் இயற்கை ஒன்றே.
7.
பறந்து சென்று பின்னும்
பட்டாம்பூச்சியின் நுண்துகள்
என் விரல்களில் இன்னும்…
8.
தரையெலாம் நீலவண்ணம்
சிறுவன் மண் ஊதி
ருசித்து தின்றான் நாகப் பழம்.
9.
கூடை நிறைய நாகப் பழம்
டம்ளரில் அளந்து விற்கிறாள்
வயது முதிர்ந்த கிழவி.
10.
நாகமரத்தில் முனி வாசம்
ஊர்மக்கள் நெருங்க பயம்
துணிந்து இரவு உறங்கும் பறவைகள்.
11.
கோயிலில் குடியிருப்பது
அசலா? போலியா?
மக்கள் வணங்கும் மூலவர்கள்
12.
பொறி தின்றவாறு
என்னிடம் பேசின குருவிகள்
பூங்காவின் ரகசியங்கள்.

ந க துறைவன்.

காக்கைகள்

காக்கைகள்

1.
தூக்கி சென்றது காக்கை
எங்கோ வைத்து படித்து மகிழ
எனது ஒரு ஹைக்கூ.
2.
கிழவிகளை ஏமாற்றுவதில்லை
கொஞ்சம் விவேகமானது
வடை திருடும் காக்கைகள்.
3.
பொல்லாத காக்கைகள் அதுகள்
எதையும் மறைத்திட முடியாது
அடுத்த வீட்டில் போட்டது எலும்புதுண்டு.
4.
கூட்டமாய் சேர்ந்து ஒருமணி நேரம்
நதிக் கரையில் பிரார்த்தனை
மழை வேண்டி காகங்கள்.
5.
புத்திசாலித்தனமாக செயல்
கண்டபடி நிற்பதில்லை
சில வீடுகள் தான் போகிறது
தன்மானக் காக்கைகள்.
6.
அங்கேதான் நீரருந்தும் தினம்
காக்கைகள் மட்டுமே அறியும்
மண்மூடி புதைக்கப்பட்டக் குளம்.
7.
நாளை என்னை சந்திக்க வரும்
பாராட்டவோ, திட்டவோ
கூட்டமாய் காக்கைகள்.
8.
நீரற்று வறண்டு
பலவருடங்கள் கழிந்தும்
குளம் மௌனமாய்.
9.
இளம் வாலிபர்களுக்கு இப்பொழுது
வாலிபால் மைதானம்
வறண்ட குளம்.
10.
காற்று வெளியில் எங்கும்
நிஜம் தேடும் பறவைகள்
கற்பனையில் கரைகிறது வாழ்க்கை.
11.
மனம் லேசானது
சூழலுக்கேற்ப உதிர்ந்தது
நகைச்சுவைப் பேச்சு.
12.
தற்செயலாய் பகிர்ந்தனர்
கிண்டல் பேச்சு புன்னகையோடு
உடைந்தது போனது அவன்மனம்.

ந க துறைவன்.
***