மாதம்: ஏப்ரல் 2021
காதல் பாடல்
காதல் பாடல்
மழை வருமா?
கொரோனா தடுப்பூசி திருவிழா
கவிதை
கால் தடம்
வடு மாங்காய்
வடு மாங்காய்
1.
புளிப்பு வடு மாங்காய்க்கு ஆசைப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் ஆசையல்லாம் இனிப்பு.
2.
புளிப்பு வடு மாங்காய்க்கு ஆசைப்பட்டு காத்திருக்கிறாள் கர்ப்பிணி பெண் அவள் ஆசைபடுகிறாளா? வயிற்றில் வளரும் சிசு ஆசைபடுகிறதா? அவள் ஆசைப்பட்டதை வாங்கி தருகிறார் கணவன் அவள் சுவைத்து சாப்பிடுகிறாள் சிசுக்கும் சேர்த்து..!!
3.
கர்ப்பிணி பெண்ணின் நினைவெல்லாம் கருவில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என்ற உருவம் பற்றிய சிந்தனை சிசு அறியுமோ? தாயின் கனவு.
4.
மனம் விரும்பியதெல்லாம் நிறைவேறி விட்டால் வாழ்க்கை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
5.
நீர் மேல் பிரபஞ்சக் கவிதை எழுதிச் செல்கிறது நீர்ப்பூச்சி.
6.
நண்பனே நண்பனை அவமானம் செய்வது வெளியில் தெரியாது அதை உள்ளுணர்ந்து கவனித்தால் புரிந்துவிடும்.
7.
யாரும் அழிக்க வேண்டியதில்லை அதுவாகவே அழிந்து விடும்.
ந க துறைவன்.
உதடுகள் கொடு
கடல் அலைகள்
அழகைப் பார்க்கும் நீ
என் மன அலைகளின்
வேட்கை கொஞ்சம் கவனி
உப்பு காற்றின் ஸ்பரிசம்
உடல் தழுவி செல்கின்றன
உன் கவனம் கடல் மீதிருந்தாலும்
உன் அருகில் இருக்கும்
என்னைக் கவனி
ஐஸ்கிரீம் தின்னும் ருசியில்
என்னை மறந்து விடாதே
என் ருசிக்கும் கொஞ்சம்
உன் உதடுகள் கொடு
சுவை
எப்படியிருக்கிறதென்று சொல்கிறேன்
காதல் என்பது
ருசிக்காகத் தானே
படைக்கப் பட்டிருக்கிறது…!!
ந க துறைவன்.
முல்லா கதை
முல்லா கதை
நட்பு
நட்பு
வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்