சில நிமிடம்…

கவிதை

சில நிமிடம்

மருத்துவமனை

உள் நோயாளியின்

சன்னலுக்கு வெளியே

அழகாய் பூத்து

அசைந்தாடி சிரிக்கிறது

செம்பருத்தி பூ

அவள் ரசிக்கிறாள்

அதன் அழகை மௌனமாய்

நோய் மறந்து மெய் மறந்து

சில நிமிடம்…

ந க துறைவன்.

நினைவுகள்

கொஞ்ச காலம் தான்

எதுவும் நினைவில் இருக்கும்

பிறகு அதுவே மறந்து போகும்

புதியதாய் ஒன்று ஒன்று

நினைவுகள் பதிவாகும்.

இப்படி மாறி கொண்டே இருப்பது தான்

மனநிலை.

ந க துறைவன்.